சோழர் காலத்தில் அறுவை மருத்துவர்கள் - நாவிதர்கள் : சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது . இராஜராஜனின் கி . பி . 1014- ஆம் ஆண்டைய கல்வெட்டொன்றில் பஞ்சவன் மங்கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்னும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர் களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது . பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல்லாகும் . எனவே பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவனைக் குறிப்பிடு வதாகும் . அனையன் பவருத்திரன் என்பவர் கோலினமை ( கோலினமை - கோலி - மயிர் ) என்ற தொழிலில் வல்லவன் என்ற குறிப்பு வருகின்றது . இப்பெயருக்கு அருகில் இராஜராஜ பிரயோகத் தரையன் என்ற சொல் மருத்துவரைக் குறிக்கும் . அம்பட்டன் என்ற சொல்லும் மருத்துவரைக் குறிக்கும் . எனவே கோலினமை என்ற சொல்லும் மருத்துவத்துடன் தொடர்புடையதாகவே இருக்கு
செல்ல வேண்டிய சுற்றுலாத்தலம் - மேகமலை ஓர் இரவு தங்கி இரண்டு நாட்களில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு குறைந்த செலவில் சுற்றுலா செய்ய நினைப்பவர்கள் தாராளமாக மேகமலைக்கு சென்று வரலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது திட்டமிடுதல் தான். மூன்று மாதங்களுக்கு முன்பே எந்த தேதியில் சென்று எந்த தேதியில் திரும்ப வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு அதற்கேற்றார் போல் ட்ரெயினில் புக் செய்தீர்கள் என்றால் செலவு குறைவாக இருக்கும். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள். காரிலேயே சென்று வர திட்டமிட்டால் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும். ட்ரெயினில் செல்வதாக இருந்தால் இரண்டு இடங்களை இறங்குவதற்கு தேர்வு செய்யலாம். சென்னை டூ திண்டுக்கல் வரை புக் செய்யலாம் அல்லது சென்னை டூ மதுரை வரை புக் செய்யலாம். சென்னையில் இருந்து செல்பவர்கள் இரவில் ட்ரெயின் (நாங்கள் பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்றோம்) ஏறினால் காலை 5 அல்லது 6 மணிக்குள் மதுரைக்கு சென்றுவிடலாம். திண்டுக்கலில் இறங்குவதென்றால் 5 மணிக்கு முன்னதாகவே இறங்கிவிடுவீர்கள். திண்டுக்கலில் இருந்து மேகமலைக்கு எப்படி செல்வது? திண்டுக்கல் மற்றும் மது